Published : 19 Apr 2022 06:52 AM
Last Updated : 19 Apr 2022 06:52 AM

பாலக்காட்டில் இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் பயணிக்க தடை

பாலக்காடு: கடந்த 15-ம் தேதி கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்பின் உள்ளூர் தலைவர் சுபைர் (43) கொலை செய்யப்பட்டார். இதற்கு பழிக்கு பழியாக கடந்த 16-ம் தேதி பாலக்காட்டின் மேலமுரி பகுதியில் ஆர்எஸ்எஸ் தொண்டர் சீனிவாசனை (45) மர்ம நபர்கள் கொலை செய்தனர். இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறும்போது, "3 பைக்குகளில் வந்த 6 பேர் கும்பல் கொலை செய்திருப்பது சிசிடிவி கேமரா மூலம் தெரிய வந்துள்ளது. பின்னால் அமர்ந்திருந்தவர்கள் சீனிவாசனை 20 முறை அரிவாளால் வெட்டியுள்ளனர்" என்றனர்.

இதையடுத்து, பாலக்காடு கூடுதல் ஆட்சியர் மணிகண்டன் கடந்த 17-ம் தேதி வெளியிட்ட உத்தரவில், " பாலக்காட்டில் ஏப்ரல் 20-ம் தேதி மாலை 6 மணி வரை இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் பயணம் செய்ய தடை விதிக்கப்படுகிறது. பெண்கள், குழந்தைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாலக்காடு மாவட்டத்தில் வரும் 21-ம் தேதி வரை 144 தடையுத்தரவு அமல் செய்யப்பட்டுள்ளது. இரு கொலைகள் தொடர்பாகவும் சிறப்பு புலனாய்வு குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன. பிஎப்ஐ, ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த 50 பேர் விசாரணை வளையத்தில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x