Published : 10 Apr 2016 12:02 PM
Last Updated : 10 Apr 2016 12:02 PM
மேற்குவங்க மாநிலம் மித்னாபூர் மாவட்டத்தில் நாளை வாக்குப்பதிவு நடக்கவுள்ள நிலையில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி கும்பலால் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
மேற்கு மித்னாபூர் மாவட்டத்தில் உள்ள துப்ராஜ்பூரில் தேர்தல் பணிகளை முடித்து விட்டு திரிணமூல் காங்கிரஸ் தொண்டர் ஜாய்தேவ் ஜனா (30) என்பவர் நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். அப்போது பயங்கர ஆயுதங்களால் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கும்பல் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே ஜனா உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் உள்பட 22 பேர் மீது ஜனாவின் மனைவி புகார் அளித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT