மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய இந்தியன் முஜாஹிதின் தீவிரவாதி கைது

மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய இந்தியன் முஜாஹிதின் தீவிரவாதி கைது
Updated on
1 min read

இந்தியன் முஜாஹிதின் தீவிரவாதி என்று சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை மகாராஷ்டிரா பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்தனர்.

செவ்வாய் கிழமை காலையில் ஜைனுல் ஆபிதின் என்பவரை மும்பை விமான நிலையத்தில் கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜூலை 2011-ல் மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்கும் இவருக்கும் தொடர்பிருப்பதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஆபிதின் தனது சொந்த ஊருக்குச் செல்ல இன்று இந்தியா வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. மும்பை வழியாக அவர் செல்வார் என்ற தகவலை அடுத்து அவருக்கு வலை விரித்தோம்” என்றார்.

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் ஆபிதின் பங்கு கணிசமாக உள்ளது என்று கூறிய அதிகாரிகள், இந்தியாவில் உள்ள இந்திய முஜாஹிதின் அமைப்பினருக்கு ஆயுதங்களையும் இவர் வழங்கியுள்ளதாகத் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in