காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லையில் நேற்று பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்து மீறி தாக்குதலில் ஈடுபட்டனர்.

சம்பா பகுதியில் பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ஜோகிந்தர் சிங் தெரிவித்தார்.

நேற்று அதிகாலை சுமார் 2.15 மணிக்கு 5-6 ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஆனால், இதற்கு இந்திய தரப்பிலிருந்து பதில் தாக்குதல் நடத்தப்படவில்லை.

கடந்த 7 மாதமாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் எதிலும் ஈடுபடவில்லை. இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறிய ரக ராக்கெட் குண்டுகளை பூஞ்ச் பகுதியில் வீசியது. இதைத்தொடர்ந்து, இரு தரப்பிலும் பட்டாலியன் கமாண்டர் அளவிலான கொடி அமர்வுக் கூட்டம் நடைபெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in