Published : 02 Apr 2016 04:00 PM
Last Updated : 02 Apr 2016 04:00 PM
பாரத மாதா கி ஜெய் சர்ச்சையை அடுத்து தற்போது வந்தே மாதரம் பாடலே உண்மையான தேசிய கீதம் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொதுச் செயலாளர் பையாஜி ஜோஷி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
ஜனகனமன கீதமே தற்போது நமது தேசிய கீதமாக இருந்து வருகிறது. அதனை மதிக்க வேண்டும், ஆனால் இது அரசியல் சாசனம் முடிவு செய்த தேசிய கீதம். எனவே உண்மையான அர்த்தத்தை ஒருவர் கருத்தில் கொண்டால் வந்தே மாதரம் என்ற பாடலே தேசிய கீதமாகும்.
அரசமைப்புச் சட்டம் தேசியமாக இருக்க வேண்டும் என்பதால் இதனை நாம் பரிசீலிக்க வேண்டும். ஜனகனமன எப்போது இயற்றப்பட்டது? இது சிலகாலம் முன்பு எழுதப்பட்டது. ஆனால் இதில் வெளிப்படும் உணர்வுகள் மாநிலத்தைக் கருத்தில் கொண்டது.
ஆனால் வந்தே மாதரத்தில் வெளிப்படும் உணர்வுகள் தேசத்தின் குணாம்சத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த இரண்டு பாடல்களின் அடிப்படை வித்தியாசம் இதுவே. இரண்டுமே மரியாதைக்குரியதே.
என்று கூறினார் ஜோஷி.
பங்கிம் சந்தர சட்டோபாத்யாய் எழுதிய வந்தே மாதரம் பாடல் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தது. 1950-ம் ஆண்டு வந்தே மாதரத்தின் முதல் 2 பாடல்களுக்கு ‘தேசிய பாடல்’ என்ற அதிகாரபூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT