Published : 06 Apr 2016 09:54 AM
Last Updated : 06 Apr 2016 09:54 AM
மேற்கு வங்கத்தில் தேர்தல் உடன்பாடு வைத்துள்ள காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளை மக்கள் இனி நம்ப மாட்டார்கள் என்று முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.
இது தொடர்பாக மம்தா நேற்று முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நடை பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத் தில் பேசியதாவது
மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒன்றாக இணைந்து விட்டன என்றே கூறலாம். இனி அக் கட்சிகளை யாரும் நம்ப மாட்டார்கள். மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் உருவாகாமல் இருந்திருந்தால் இடதுசாரிகளை ஆட்சியில் இருந்து அகற்றியிருக்க முடியாது.
மேற்கு வங்கத்தில் 55 ஆயிரம் காங்கிரஸ் தொண்டர்கள் மார்க் சிஸ்ட் கட்சியினரால் கொல்லப்பட் டுள்ளனர். இவர்களை மார்க்சிஸ்ட் கட்சியிடம் காங்கிரஸ் தலைவர்கள் விற்றுவிட்டனர். இதற்காக அவர்கள் வெட்கப்பட வேண்டும். இவர் களுக்கு தங்கள் மீதே நம்பிக்கை யில்லை. இவர்கள் காங்கிரஸ் கட்சியை சிவப்பாக்கி விட்டனர்.
காங்கிரஸ் வாழ்க என்று மார்க் சிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் வாழ்க என்று காங்கிரஸ் கட்சியும் முழங்கு கின்றன. இரு கட்சிகளும் ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கு எதிராக சூழ்ச்சி செய்கின்றன.
மேற்கு வங்கத்தில் முதல்கட்ட தேர்தலில் 81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இவை அனைத் தும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் மற்றும் பாஜகவுக்கு எதிரான வாக்குகள்.
பாஜகவை பொறுத்தவரை அவர்கள் மக்களிடையே பிளவு ஏற்படுத்துவதை விட வேறு எதுவும் செய்யவில்லை. இவ்வாறு மம்தா பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT