Published : 01 Apr 2016 11:05 AM
Last Updated : 01 Apr 2016 11:05 AM
கொல்கத்தா மேம்பால விபத்து 'கடவுளின் செயல்' என கட்டுமான நிறுவனம் விளக்கமளித்துள்ளது பலதரப்பிலும் கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவில் புதிதாக கட்டப்படும் மேம்பாலம் இடிந்து 24 பேர் உயிரிழந்தனர். 78 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க ராணுவ வீரர்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர்.
மேம்பால கட்டுமானப் பணியை மேற்கொண்டு வரும் ஹைதராபாதைச் சேர்ந்த ஐ.வி.ஆர்.சி.எல். நிறுவன மூத்த அதிகாரி கே.பி. ராவ் கூறும்போது, "பணியின்போது இரும்பு பாலம் ஒன்று நழுவி கீழே சரிந்தது. அதைத் தொடர்ந்து மற்றொரு இரும்பு பாலம் சரிந்து விழுந்தது. இதன்காரணமாகவே விபத்து நேரிட்டுள்ளது. எங்கள் நிறுவன கட்டுமானங்களில் இதற்கு முன்பு இதுபோன்ற சம்பவம் நேரிட்டதில்லை. இது கடவுளின் செயல்" என்றார்.
மம்தா கருத்து:
முதல்வர் மம்தா பானர்ஜி கூறியபோது, கடந்த மார்க்சிஸ்ட் ஆட்சியின்போது டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன, இந்த விபத்துக்கு மார்க்சிஸ்ட் கட்சிதான் பொறுப்பு என்று முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT