Published : 26 Mar 2022 07:31 AM
Last Updated : 26 Mar 2022 07:31 AM

ஆந்திராவில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பார்க்க பைக்கில் சென்ற 3 பேர் விபத்தில் உயிரிழப்பு

திருப்பதி: பிரபல இயக்குநர் ராஜமவுலி இயக்கி, ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடித்து பெரும் எதிர்ப்பார்ப்பை உண்டாக்கிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் நேற்று உலகமெங்கும் வெளியானது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரசிகர்களுக்கு நேற்று அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது.

இந்நிலையில் சித்தூர் மாவட்டம், குப்பம் அருகே, வி. கோட்டா - பேரணாம்பட்டு சாலையில் உள்ள பாப்பைய காரி பள்ளி எனும் இடத்தில் நேற்று முன்தினம் இரவு எதிரெதிரே வேகமாக வந்த இருமோட்டார் பைக்குகள் மோதிக் கொண்டன. இதில் யுகந்தர், கங்காதர், துர்கா ஆகிய 3 பேர் அதே இடத்தில் உயிரிந்தனர். மேலும் ஒருவர்படுகாயம் அடைந்தார். இவர்கள் குப்பத்தில் ஆர்.ஆர்.ஆர் திரைப் படத்தை காண சென்ற போது டிக்கெட் கிடைக்காததால் வீடு திரும்பும்போது, விபத்தில் சிக்கியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x