Published : 19 Jun 2014 10:18 AM
Last Updated : 19 Jun 2014 10:18 AM

தருண் தேஜ்பால் கோரிக்கை நிராகரிப்பு

தருண் தேஜ்பால் ஜாமீன் மனுவை முன்கூட்டியே விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. ஜூன் 27-ம் தேதி ஜாமீன் குறித்து விசாரிக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளது.

தெஹல்கா நிறுவனத்தில் பணியாற்றிய இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில், அதன் நிறுவனர் ஆசிரியர் தருண் தேஜ்பால் கடந்த நவம்பர் 30-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது தாய் கடந்த மே 18-ம் தேதி மரணமடைந்ததால், அவருக்கு உச்ச நீதிமன்றம் மூன்று வாரம் ஜாமீன் வழங்கியது.

ஜாமீன் கிடைத்தும் தாயின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாததால், இதர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வசதியாக ஜூன் 27-ம் தேதி வரை ஜாமீன் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், தருண் தேஜ்பால் மனுவை முன்கூட்டியே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் சல்மான் குர்ஷித், உச்ச நீதிமன்ற விடுமுறை கால நீதிமன்றத்தில் முறையிட்டார். அவரது கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள் விக்ரம்ஜித் சென் மற்றும் எஸ்.கே.சிங், ஆகியோர் ‘ஜாமீன் முடிவடையும் ஜூன் 27-ம் தேதி மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’ என்று உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x