Published : 04 Jun 2014 06:59 PM
Last Updated : 04 Jun 2014 06:59 PM

உ.பி: வயலில் சிறுநீர் கழித்ததற்காக 5 வயது சிறுவனின் பிறப்புறுப்பை வெட்டிய பயங்கரம்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் வயலில் சிறுநீர் கழித்ததற்காக 5 வயது சிறுவனின் பிறப்புறுப்பு வெட்டப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரதாப்காரில் உள்ள கோராலி என்ற கிராமத்தில் இந்த பயங்கரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

செங்கற்சூளையில் வேலைபார்க்கும் கூலித் தொழிலாளி ஷேஷ்ராம். இவரது மகன் ரிதேஷ், வயது 5.

சம்பவ தினத்தன்று ரிதேஷ் வயலில் சிறுநீர் கழித்ததாகவும், அதை நேரில் பார்த்த வயலுக்குச் சொந்தக்காரர் சிறுவன் ரிதேஷைப் பிடித்து அடித்ததோடு அவனது பிறப்புறுப்பையும் வெட்டியுள்ளார்.

ரத்தம் பீறிட அலறியபடியே ஒருவழியாக வீடு வந்து சேர்ந்த ரிதேஷ் நடந்ததைக் கூறியுள்ளார். உடனே அலகாபாத் மருத்துவமனையில் சிறுவன் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக சிறுவனின் தந்தை துர்கேஷ் மௌரியா என்பவர் மீது போலீசில் புகார் அளித்தார். மௌரியாவின் மகனும் சேர்ந்து இந்தக் கொடுமையை சிறுவனுக்குச் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

உறுப்பை அறுத்த மௌரியாவும் அவரது மகனும் தலைமறைவாகி விட்டதாகவும் அவர்களைப் பிடிக்க வலை விரிக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே சிறுமிகள் இருவர் கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தினால் அகிலேஷ் அரசு ஆட்டம் கண்டு வரும் நிலையில் இந்தச் சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற மாநிலங்களில் பெரிய பெரிய குற்றங்கள் நடக்கும்போது அதனை ஊடகங்கள் கண்டுகொள்வதில்லை என்றும் உ.பி.யில் சிறு குற்றங்கள் கூட ஊடகங்களால் பெரிது படுத்தப்படுகிறது என்று ஏற்கனவே முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறியிருப்பது இந்தத் தருணத்தில் கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x