Published : 28 Jun 2014 01:06 PM
Last Updated : 28 Jun 2014 01:06 PM
கெயில் எரிவாயுக் குழாய் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்த விபத்து மிகவும் வருந்தத் தக்கது. அப்பாவி மக்கள் உயிரிழந் துள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தர விடப்பட்டுள்ளது.
இதில், அதிகாரிகளின் அலட்சியப்போக்கிருந்தால், கண்டிப்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இறந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு சார்பில் ரூ. 3 லட்சம் வழங்கப்படும். மேலும் கெயில் நிறுவனத்திடம் இருந்து ஒரு குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் என தலா ரூ. 25 லட்சம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT