Published : 28 Jun 2014 01:06 PM
Last Updated : 28 Jun 2014 01:06 PM

இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு: முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதி

கெயில் எரிவாயுக் குழாய் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்த விபத்து மிகவும் வருந்தத் தக்கது. அப்பாவி மக்கள் உயிரிழந் துள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தர விடப்பட்டுள்ளது.

இதில், அதிகாரிகளின் அலட்சியப்போக்கிருந்தால், கண்டிப்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இறந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு சார்பில் ரூ. 3 லட்சம் வழங்கப்படும். மேலும் கெயில் நிறுவனத்திடம் இருந்து ஒரு குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் என தலா ரூ. 25 லட்சம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x