Published : 13 Mar 2022 11:42 AM
Last Updated : 13 Mar 2022 11:42 AM

நாடுமுழுவதும் 3,116 பேருக்கு கரோனா தொற்று: பலி எண்ணிக்கை 47

புதுடெல்லி: இந்தியாவில் அன்றாட கரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,116 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிதாக 3,116 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்த பாதிப்பு 4,29,90,991 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கரோனாவில் இருந்து 4,24,37,072 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தி்ல் 5,559 பேர் குணமடைந்துள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 38,069 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 47 பேர் நோய்த் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.

ஒட்டுமொத்த உயிரிழப்பு 5,15,850 என்றளவில் உள்ளது.

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் மொத்த எண்ணிக்கை 1,80,13,23,547 ஆக உள்ளது.

இதுவரை நாடு முழுவதும் மொத்தம் 77,84,77,669 மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று மட்டும் 7,61,737மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x