Published : 11 Mar 2022 07:31 AM
Last Updated : 11 Mar 2022 07:31 AM

ஆந்திராவிலும் பாஜக அலை வீசும்: மாநில தலைவர் சோம வீர்ராஜு நம்பிக்கை

விஜயவாடா: உத்தர பிரதேசம், மணிப்பூர், கோவா, உத்தரா கண்ட் ஆகிய 4 மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள பாஜக மாவட்ட கட்சி அலுவலகங்கள் முன் பாஜக தொண்டர்கள், நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதேபோன்று, விஜயவாடாவில் உள்ள மாநில தலைமை அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகள் கேக் வெட்டி, பட்டாசு கொளுத்தி கொண்டாடினர்.

அப்போது, பாஜகவின் மாநில தலைவர் சோம வீர்ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘பஞ்சாப் தவிர்த்து மற்ற 4 மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. தனி மெஜாரிட்டியுடன் இந்த 4 மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. உத்தர பிரதேச மாநில மக்கள் பாரத பிரதமர் மோடியின் வளர்ச்சி மிகு ஆட்சிக்காகவும், முதல்வர் யோகியின் நல்லாட்சி தொடர வேண்டுமெனவும் மீண்டும் அவரை முதல்வராக்கினர். விரைவில் இது ஆந்திராவிலும் பிரதிபலிக்கும். பாஜக அலை ஆந்திராவிலும் வீசும் காலம் விரைவில் வரும்’’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x