எழுதுபொருள் வாங்க முடியாத வறுமை: ஒடிசாவில் 14 வயது சிறுமி தற்கொலை

எழுதுபொருள் வாங்க முடியாத வறுமை: ஒடிசாவில் 14 வயது சிறுமி தற்கொலை
Updated on
1 min read

ஒடிசாவில் அடிப்படை எழுதுபொருள் வாங்க பெற்றோர் காசு தராததால், மனமுடைந்த 14 வயது சிறுமி ஒருவர் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ஒடிசாவின் தலைநகரான புவனேஷ்வரிலிருந்து 170 கி.மீ அருகே உள்ள அஸ்கா என்ற பகுதியில் பிஜாய் நாயக் என்பவர் வசிக்கிறார். இவரது மகள்(14) இந்த ஆண்டு 7 ஆம் வகுப்புக்கு தேர்வாகினர். பெற்றோரிடம் நீண்ட நாட்களாக புதிய வகுப்புக்கு புதிதாக நோட்டுப் புத்தகம் உள்ளிட்ட அடிப்படை எழுதுப்பொருட்கள் வாங்க காசு தருமாறு கேட்டிருந்தார்.

தினக் கூலியாக வேலைப் பார்த்து வந்த பிஜாய் நாயக், சமீபத்தில் நோய்வாய்ப்பட்ட நிலையில், குடும்பம் மிகவும் நெருக்கடியில் இருந்து வந்தது. இந்த நிலையில் எழுதுப்பொருட்கள் வாங்க காசு தர தாமதமானதை அடுத்து மனமுடைந்த சிறுமி, தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதனைக் கண்ட பக்கத்து வீட்டுக்காரர்கள் சிறுமியை உடனடியாக அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இருப்பினும் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in