Published : 15 Apr 2016 09:03 PM
Last Updated : 15 Apr 2016 09:03 PM
காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமையன்று 3-வது நாளாக ஊரடங்கை ஒத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
வடக்கு காஷ்மீரில் குப்வாரா நகரம், கிரால்குண்ட், ஹண்டுவாரா, மாகாம் மற்றும் லாங்கேட் பகுதிகளில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
தலைநகர் ஸ்ரீநகரில் நேற்று ஆங்காங்கே கல்வீச்சு சம்பவங்கள் நடந்த நிலையில், இந்நகரின் 5 காவல்நிலைய பகுதிகளில் இன்றும் கட்டுப்பாடுகள் நீடித்தன.
வதந்தி பரவுவதை தடுக்கும் வகையில் காஷ்மீர் முழுவதும் 2-வது நாளாக மொபைல் இணைய தள சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.
பிரிவினைவாத அமைப்புகள் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்காத போதிலும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெரும்பாலான மாவட்டத் தலைநகரங்களில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பொதுப் போக்குவரத்து வாகனங்களும் பெருமளவில் இயங்கவில்லை.
ஹண்டுவாரா நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை பள்ளி மாணவியிடம் ராணுவ வீரர் ஒருவர் அத்துமீறி நடந்துகொண்டதாக புகார் எழுந்ததை தொடர்ந்து வன்முறை வெடித்தது. வன்முறை கும்பலை விரட்ட பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் இறந்தனர். இதற்கு எதிராக காஷ்மீர் பள்ளத்தாக்கில் வன்முறை பரவியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT