Last Updated : 04 Mar, 2022 08:56 AM

 

Published : 04 Mar 2022 08:56 AM
Last Updated : 04 Mar 2022 08:56 AM

இரு பிரிவினரிடையே மோதல்: கர்நாடக மாநிலத்தில் 187 பேரை கைது செய்தது போலீஸ்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் குல்பர்காவில் உள்ள ஆலந்த் நகரில் உள்ள தர்காவில் சிவலிங்கம் உள்ளது. மகாசிவராத்திரி அன்று பஜ்ரங் தளம் அமைப்பினர் அங்கு பூஜை நடத்த முடிவெடுத்தனர். இதற்கு முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு பிரி வினரிடையே மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில் இரவு நேரத்தில் கல்வீச்சு தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து மார்ச் 5-ம் தேதி வரை ஆலந்த் நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போலீஸார் மற்றும் வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக 5 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளது. இவ்வழக்குகளில் 187 பேரை கைது செய்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

இதனிடையே பஜ்ரங் தளம் நிர் வாகிகள், ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் ஆகியோர் குல்பர்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மத்திய அமைச்சர் பகவந்த் குபா தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் அங்குள்ள தர்காவுக்கு பேரணியாக சென்றனர். அப்போது சில முஸ்லிம் அமைப்பினர் அவர்கள் மீது கல்வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த வன்முறையால் பதற்றம் அதிகரித்துள்ளதால் அங்கு பலத்த போலீஸ் பாது காப்பு போடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x