Published : 16 Apr 2016 11:22 AM
Last Updated : 16 Apr 2016 11:22 AM
மேற்குவங்க மாநிலத்தில் பிர்பம் மாவட்ட எஸ்பி மற்றும் மூன்று காவல் நிலைய அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நேற்று அதிரடியாக பணியிட மாற்றம் செய்தது.
மேற்குவங்க மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் நாளை 2 கட்ட தேர்தல் நடக்கவுள்ளது. இதையொட்டி ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜையதி மேற்குவங்க மாநிலத்துக்கு நேற்று வந்தார். அப்போது காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் 2-ம் கட்டத் தேர்தல் நடக்கவுள்ள பிர்பம் மாவட்ட எஸ்பி முகேஷ் குமார் மீது புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து எஸ்பி முகேஷ் குமார் வேறு மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சப்யாசாச்சி மிஸ்ரா புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்டார். இதே போல் அம்மாவட்டத் துக்கு உட்பட மூன்று காவல் நிலைய அதிகாரிகளும் வேறு காவல் நிலை யங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
கொல்கத்தா போலீஸ் ஆணை யர் ராஜீவ் குமார் மீது எதிர்க்கட்சிகள் புகார் அளித்ததால் அவர் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT