Last Updated : 27 Apr, 2016 09:39 AM

 

Published : 27 Apr 2016 09:39 AM
Last Updated : 27 Apr 2016 09:39 AM

இத்தாலி வீரர் தாய்நாட்டில் தங்க செப். 30 வரை அனுமதி

கடந்த 2012-ம் ஆண்டு கேரள கடல் பகுதியில் 2 மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இதுதொடர் பாக அவ்வழியாக வந்த என்ரிகா லெக்சி சரக்குக் கப்பலில் இருந்த லத்தோர் மற்றும் சல்வடோர் ஜிரோன் ஆகிய 2 இத்தாலி கடற்படை வீரர்களும் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனிடையே இந்த 2 வீரர்களும் தாய் நாடு செல்ல உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில் லத்தோரின் கோரிக்கையை ஏற்று வரும் செப்டம்பர் 30 வரை தாய் நாட்டில் தங்கியிருக்க உச்ச நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x