Published : 10 Apr 2016 11:45 AM
Last Updated : 10 Apr 2016 11:45 AM
ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், ஆத்மகூர் பகுதியில் தனியார் அறக்கட்டளை சார்பில் நேற்று நடைபெற்ற விழாவில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச உபகரணங்களை மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு வழங்கினார்.
விழாவில் அவர் பேசும்போது, “நாட்டில் சுமார் 2.5 லட்சம் மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இவர்களுக்கு மத்திய அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. 3 சக்கர சைக்கிள், கருப்பு கண்ணாடிகள், கைத்தடிகள் போன்றவை இலவசமாக வழங்கப்படுகின்றன. இவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறோம்.
மாற்றுத் திறனாளிகளுக்காக நாடு முழுவதும் பல்வேறு தொழிற் பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன. விரைவில் இவர்களுக்கு நவீன தொழில்நுட்ப பயிற்சிகளும் அளிக்கப்படும். ஒவ்வொரு துறையிலும் இவர்கள் சாதிக்கும் வகையில் அனைத்து துறைகளின் சார்பிலும் பயிற்சி அளிக்கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT