ஆசியாவின் மிகப்பெரிய சாண எரிவாயு ஆலை: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிரதமர் நரேந்திர மோடி திறப்பு

ஆசியாவின் மிகப்பெரிய சாண எரிவாயு ஆலை: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிரதமர் நரேந்திர மோடி திறப்பு
Updated on
1 min read

மத்திய பிரதேசம் இந்தூரில் அமைக்கப்பட்டுள்ள ஆசியாவின் மிகப்பெரிய சாண எரிவாயு ஆலையைபிரதமர் மோடி நேற்று காணொலிமூலம் திறந்து வைத்தார்.

தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் குப்பை இல்லா நகரங்களை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதன் பகுதியாகவே இந்த ஆலை அமைக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த ஆலையை காணொலி வாயிலாக திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, ‘சாண எரிவாயு ஆலை மிக முக்கியமான ஒரு முன்னெடுப்பு. அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் 75 நகராட்சிகளில் சாண எரிவாயு ஆலை தொடங்கப்படும். தூய்மையான, மாசுபாடற்ற நகரங்கள் உருவாக்கப்படும்’ என்று குறிப்பிட்டார்.

இந்த ஆலை தினமும் 550 டன்மட்கும் குப்பைகளை பிரித்தெடுக்கும் என்றும் நாளொன்றுக்கு 17,000 கிலோ இயற்கை எரிவாயுவையும் 100 டன் இயற்கை உரத்தை உற்பத்தி செய்யும் திறன்கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலை மூலம் உற்பத்தி செய்யப்படும் இயற்கை வாயுவில் 50 சதவீதத்தை இந்தூர் நகராட்சி கொள்முதல் செய்யும் என்றும் இந்த எரிவாயு நகரப் பேருந்துகளில் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in