Last Updated : 17 Apr, 2016 11:16 AM

 

Published : 17 Apr 2016 11:16 AM
Last Updated : 17 Apr 2016 11:16 AM

வாக்களிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த பழங்குடியினத் தலைவர்கள் தேர்தல் தூதர்களாக நியமனம்

வாக்களிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த, கேரளாவில் பழங்குடி யினத் தலைவர்கள் தேர்தல் தூதர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் மே 16-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய ஜனநாயக முன்னணி, இடதுசாரிகள் முன்னணி, பாஜக கூட்டணி ஆகியவற்றுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்தத் தேர்தலில் அதிக வாக்கு கள் பதிவாவதை உறுதி செய்ய தேர்தல் அதிகாரிகள் பல்வேறு நட வடிக்கைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு கட்டமாக, கேரளாவில் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் வாக்களிக்கும் கடமை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த அதி காரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற் காக பழங்குடியினத் தலைவர்கள் 7 பேரை மாவட்ட அதிகாரிகள் தேர்ந் தெடுத்து தேர்தல் தூதுவர்களாக பணியாற்ற கேட்டுக்கொண்டு உள்ளனர்.

இவர்கள் பழங்குடியின மக்களிடம் வாக்களிப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள். இதன் மூலம் வாக்குப் பதிவு சத வீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. குறிப்பாக அருவிக் கரா தொகுதிக்கு உட்பட்ட கோட்டூர் பகுதியில் பழங்குடியினத்தவர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்ற னர். அவர்களிடம் பழங்குடியினத் தலைவர்கள் விழிப்புணர்வு பிரச் சாரத்தில் ஈடுபடுவார்கள். இதற்கான செயல் திட்டத்தை மாவட்ட ஆட்சி யரும் தேர்தல் அதிகாரியுமான பிஜு பிரபாகர் நேற்று தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ் பழங்குடி யினத் தலைவர்கள் குஞ்சுராமன் கனி, மல்லன் கனி, செல்லப்பன் கனி, சந்திரன் கனி, கிருஷ்ணன் கனி, வெள்ளியாயன் கனி, சுனில் குமார் கனி ஆகியோர் தேர்தல் தூதுவர் களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x