Published : 14 Feb 2022 06:54 AM
Last Updated : 14 Feb 2022 06:54 AM

அம்பேத்கர் பள்ளியில் சேர்ந்த நவ. 7-ம் தேதியை மாணவர் தினமாக கொண்டாட வேண்டும்: குடியரசுத் தலைவர் வேண்டுகோள்

ரத்னகிரி: மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள அம்பேத்கரின் பூர்வீக கிராம மான அம்படவேயில் உள்ள அம்பேத்கரின் நினைவுக் கலசத் துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் பூஜை செய்தார். அப்போது அவர் பேசியதாவது: இந்திய அரசியல் சட்டத்தின் தந்தை என்று போற்றப்படும் அம்பேத்கர், நாட்டின் கல்வித் துறைக்கு முக்கிய பங்காற்றி யுள்ளார். மாணவர்கள் கல்வி பெறவும், கல்வி வளர்ச்சிக்கும் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டார். அம்பேத்கர் 1900-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி பள்ளியில் சேர்ந்தார். இதை நினைவு கூரும் வகையில் மகாராஷ்டிர அரசு நவம்பர் 7-ம் தேதியை மாணவர் தினமாக கொண்டாடுகிறது. அம்பேத்கரை கவுரவிக்கும் வகையில், கல்விக்கு அவர் அளித்துள்ள பங்களிப்பை போற்றும் வகையில், நவம்பர் 7-ம் தேதி நாடு முழுவதும் தேசிய மாணவர் தினமாக கொண்டாடப்பட வேண்டும்.

அம்பேத்கர் போற்றிய நல்லிணக்கம், கருணை மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு சமூக அமைப்பு இருக்க வேண்டும்.

இவ்வாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் பேசினார்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x