Last Updated : 07 Apr, 2016 09:26 AM

 

Published : 07 Apr 2016 09:26 AM
Last Updated : 07 Apr 2016 09:26 AM

உத்தராகண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு எதிரான மனு: விசாரணையை ஒத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு

உத்தராகண்ட் காங்கிரஸ் அரசுக்கு எதிராக அக்கட்சியைச் சேர்ந்த 9 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து, மார்ச் 28-க்குள் பெரும்பான்மையை நிரூ பிக்குமாறு முதல்வர் ஹரிஷ் ராவத் துக்கு ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.

ராவத் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியானதால் ஜனநாயக நடைமுறை சீர்குலைந்துவிட்ட தாகக் கூறி அங்கு மார்ச் 27-ம் தேதியே குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இதை எதிர்த்து ஹரிஷ் ராவத் நைனிடால் உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த தனி நீதிபதி, மார்ச் 31-ல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து 30-ம் தேதி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் மற்றும் நீதிபதி வி.கே.பிஷ்ட் ஆகி யோர் அடங்கிய அமர்வு, உத்தரா கண்ட் சட்டப்பேரவையில் வாக் கெடுப்பு நடத்த தனி நீதிபதி பிறப் பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. அத்துடன் விசா ரணையை ஏப்ரல் 6-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

இதற்கிடையே, மாநில அரசின் செலவுக்காக நிதி ஒதுக்க வகை செய்யும் அவசர சட்டத்தை கடந்த 1-ம் தேதி மத்திய அரசு பிறப்பித்தது. இதை எதிர்த்து ஹரிஷ் ராவத் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். இதுகுறித்து பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் களான துஷார் மேத்தா மற்றும் மணீந்தர் சிங் ஆகியோர் ஆஜராகி னர். அப்போது அவர்கள் கூறும் போது, “உத்தராகண்ட் சட்டப் பேரவையில் நிதி ஒதுக்கீட்டு மசோதா பெரும்பான்மை உறுப் பினர்களின் ஆதரவின்றி நிறை வேற்றப்பட்டது. எனவே, இது குறித்து விரிவாக பதில் அளிக்க கூடுதல் அவகாசம் தேவைப்படுவ தால் விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும்” என்றனர்.

முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி கூறும்போது, “செலவினத்துக்கான நிதி ஒதுக்கீட்டு மசோதா மார்ச் 18-ம் தேதியே நிறைவேற்றப்பட்டு விட்டது. எனவே இதுகுறித்து பதில் அளிப்பதற்காக விசாரணையை மத்திய அரசு ஒத்தி வைக்கக் கோரு வதை ஏற்கக் கூடாது” என்றார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், “விசாரணையை ஒத்தி வைக்க முடியாது. நிதி மசோதா குறித்து பதில் மனு தாக்கல் செய்ய விரும் பினால், இன்றோ (புதன்கிழமை) அல்லது நாளையோ (வியாழக் கிழமை) தாக்கல் செய்யுங்கள்” என்றனர். பின்னர் சிங்வி தனது வாதத்தை எடுத்துரைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x