Published : 21 Apr 2016 11:32 AM
Last Updated : 21 Apr 2016 11:32 AM
மேற்குவங்கத்தில் 3-ம் கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் முர்சிதாபாத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
மேற்கு வங்க மாநில சட்டப் பேரவையின் 62 தொகுதிகளுக்கு 3-ம் கட்ட தேர்தலையொட்டி, 75 ஆயிரம் துணை ராணுவப் படையினர் உட்பட ஒரு லட்சம்பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பலத்த பாதுகாப்புக்கும் இடையே இந்த படுகொலை சம்பவம் நடந்துள்ளது.
நடந்த சம்பவம் குறித்து முர்சிதாபாத் போலீஸ் எஸ்.பி. சி.சுதாகர் கூறும்போது, "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். தாஹிதூர் என்ற அந்த நபரை வேறு ஓர் இடத்தில் வைத்து கொலை செய்தவர்கள் தூம்கால் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட சிவபாரா வாக்குச்சாவடி அருகே சடலத்தை போட்டுச் சென்றுள்ளனர். இந்த கொலை தேர்தல் சம்பந்தமானது அல்ல" என்றார்.
ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான அனிசூர் ரஹ்மான் கூறும்போது, "தஹிதூர் இஸ்லாம் , வாக்குச்சாவடியில் வெடிகுண்டு வீசப்பட்டதால் கொல்லப்பட்டார். திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் ஆங்காங்கே வன்முறையில் ஈடுபட்டு வாக்குச்சாவடியை கைப்பற்ற முயற்சிக்கின்றனர்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT