காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கவுன்ட்டவுன் தொடக்கம்: மத்திய அமைச்சர் விமர்சனம்

காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கவுன்ட்டவுன் தொடக்கம்: மத்திய அமைச்சர் விமர்சனம்
Updated on
1 min read

கேரளாவில் வரும் 16-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி, மார்க்சிஸ்ட் இடதுசாரி ஜனநாயக முன்னணி, பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

பாஜக தேசிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். தேர்தல் தொடர்பாக மத்திய ரசாயன, உரத்துறை அமைச்சர் அனந்தகுமார் திருவனந்தபுரத்தில் நேற்று கூறியதாவது:

மேற்குவங்கத்தில் காங்கி ரஸும் இடதுசாரி கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிடு கின்றன. கேரளாவில் இருகட்சி களுக்கும் இடையே மறைமுக மான திரைமறைவு கூட்டணி உள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இரு கட்சிகளின் சாயம் வெளுக்கும்.

காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி களின் கவுன்ட்டவுன் தொடங்கி விட்டது. இரு கட்சிகளும் தோல்வி பயத்தில் ஏதேதோ உளறி வருகின்றன.

இந்தத் தேர்தலில் பாஜக தலை மையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும். கேரள மக்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. இரு கட்சிகளின் ஆட்சியில் அவர்கள் வெறுத்துப் போயுள்ளனர்.

கடந்த மக்களவைத் தேர்த லைப் போன்று கேரள சட்டப் பேரவைத் தேர்தலிலும் பாஜக அமோக வெற்றி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in