Last Updated : 03 Feb, 2022 10:49 AM

 

Published : 03 Feb 2022 10:49 AM
Last Updated : 03 Feb 2022 10:49 AM

நாடு முழுவதும் புதிதாக 1,72,433 பேருக்கு கரோனா: 15 முதல்18 வயதுடையோருக்கு 2 ஆம் தவணை தடுப்பூசி செலுத்த வலியுறுத்தல்

புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,72,433 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது நேற்றைவிட 7% அதிகம். அதேபோல் அன்றாட பாசிடிவிட்டி விகிதமும் நேற்றுமுன் தினம் 9.26% என்றளவில் இருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 10.99% ஆக சற்றே அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேர நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 1,72,433.

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 4,18,03,318.

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 2,59,107.

இதுவரை குணமடைந்தோர்: 3,97,70,414.

சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை: 15,33,921.

தினசரி பாசிடிவிட்டி விகிதம் 10.99% என்றளவில் உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 1008.

கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,98,983.

இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கை: 167.87 கோடி.

இதற்கிடையில், மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் 15 வயது முதல் 18 வயதுடையோருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துவதை துரிதப்படுத்துமாறு மத்திய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x