Last Updated : 06 Apr, 2016 08:00 PM

 

Published : 06 Apr 2016 08:00 PM
Last Updated : 06 Apr 2016 08:00 PM

சிறு தொழில்களின் குரல்வளையை மத்திய அரசு நெரிக்கிறது: ராகுல் தாக்கு

சிறு தொழில்களின் குரல்வளையை மத்திய அரசு நெரிக்கிறது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

மத்திய அசின் கலால் வரி விதிப்புக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நகைக் கடை உரிமையாளர்கள் புதனன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

அப்போது ராகுல் காந்தி பேசும்போது, “வெள்ளி அல்லாத நகைகளுக்கு மத்திய அரசு 1 சதவீதம் கலால் வரி விதித்திருப்பது இத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை கொலை செய்யும் முயற்சியாகும். பெரும் தொழிலதிபர்களின் நலனுக்காகவே மத்திய அரசு இவ்வாறு செய்கிறது. சிறு தொழில்களின் குரல்வளையை மத்திய அரசு நெரிக்கிறது.

இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் குறித்து பிரதமர் மோடி பேசுகிறார். உண்மையில் அவர் 5 - 6 தொழிலதிபர்களை பற்றித்தான் கவலைப்படுகிறார். நகை வியாபாரிகளிடம் ரூ.10 ஆயிரம் கோடிக்கெல்லாம் தொழிற்சாலை இல்லை. இவர்கள் சிறுதொழில் உரிமையாளர்கள். எனவே இவர்களைப் பற்றி மோடி கவலைப்படுவதில்லை” என்றார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங், ஹரியாணா முன்னாள் முதல்வர் புபேந்தர் ஹூடா, அவரது மகனும் ரோட்டக் எம்.பி.யுமான தீபேந்தர் ஹூடா, டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் ஆகியோரும் இப்போராட்டத்தில் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x