Published : 24 Jan 2022 07:27 AM
Last Updated : 24 Jan 2022 07:27 AM

காஷ்மீரில் அடுத்த 5 ஆண்டில் ரூ.50,000 கோடி முதலீடு உருவாகும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தகவல்

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.50,000 கோடிஅளவில் முதலீடுகள் உருவாகும் என்றும் இதன் மூலம் அங்கு வேலைவாய்ப்புகள் பெருகும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், ‘மாவட்ட நல் நிர்வாகக் குறியீடு’ என்ற திட்டத்தை சனிக்கிழமை அன்று காணொலி வாயிலாக மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசும்போது ‘‘ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி சிறந்த தொழிற் கொள்கைகளை உருவாக்கியுள்ளார். இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் அங்கு ரூ.50,000 கோடி அளவில் முதலீடுகள் உருவாகும். ஏற்கெனவேரூ.12,000 கோடி அளவிலானமுதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட் டுள்ளன. அவற்றில் ரூ.2,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

5 லட்சம் பேருக்கு வேலை

இந்த முதலீடுகள் மூலம் காஷ்மீரில் வேலைவாய்ப்புகள் பெருகும். 5 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். காஷ்மீரில் உள்ள இளைஞர்கள் மோடி முன்னெடுக்கும் வளர்ச்சித் திட்டங்களில் பங்கெடுக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சி பெற்ற பிராந்தியமாக காஷ்மீர் மாறுவதை யாராலும் தடுக்க முடியாது’’ என்று அவர் கூறினார்.

‘மாவட்ட நல் நிர்வாகக் குறியீடு’ திட்டத்தைப் பற்றி அவர்கூறும்போது, ‘‘இத்திட்டம் காஷ்மீரில் உள்ள மாவட்டங் களிடையே ஆரோக்கியமான போட்டிச் சூழலை ஏற்படுத்துவதன் வழியே அவற்றின் நிர்வாக நடைமுறையை மேம்படுத்தும். மத்திய அரசும் மாநில அரசும் அறிமுகப்படுத்தும் தொழிற்திட்டங்கள் மாவட்ட அளவில் கண்காணிக்கப்படும்.

மாவட்டங்கள் அவற்றின் சிறப்பான நிர்வாகத்தின் அடிப்படையில் தர வரிசைப்படுத் தப்படும். இதனால், வளர்ச்சி குறைவான பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த முடியும்’’ என்றார்.

தற்போது ‘மாவட்ட நல் நிர்வாக குறியீடு’ திட்டம் ஜம்மு காஷ்மீரில் உள்ள 20 மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இத்திட்டம் இந்தியாவில் உள்ள ஏனைய மாநிலங்களுக்கும் படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x