Published : 13 Apr 2016 09:22 AM
Last Updated : 13 Apr 2016 09:22 AM
தொலைக்காட்சி நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கில் அவரது காதலர் ராகுல் ராஜ் சிங்கை கைது செய்ய வரும் 18-ம் தேதி வரை மும்பை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
நீதிபதி மிருதுளா பத்கர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதேசமயம், பங்குர்நகர் காவல் நிலையத்தில் ராகுல் தினமும் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
தொலைக்காட்சி நடிகை பிரதியுஷா கடந்த 1-ம் தேதி வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரின் காதலர் ராகுல் உடனான பிரச்சினையே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. ராகுல் மீது தற்கொலைக்குத் தூண்டிய தாக வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT