

காஷ்மீரில் குப்வாரா மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இது குறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறும்போது, "புதாசி எனும் இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து அப்பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்தனர். பாதுகாப்புப் படையினரை நோக்கி தீவிரவாதிகள் சரமாரியாக சுட்டனர். இதனையடுத்து நடத்தப்பட்ட பதில் தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இரண்டு பயங்கரவாதிகளும் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெறுகிறது" என்றார்.