Published : 23 Jan 2022 12:02 PM
Last Updated : 23 Jan 2022 12:02 PM

இந்தியாவில் புதிதாக 3,33,533 பேருக்கு தொற்று: நேற்றைவிட சற்றே குறைவு

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,33,533 பேருக்கு தொற்று உறுதியானது. தொடர்ந்து 2வது நாளாக கரோனா தொற்று சற்றே குறைந்துள்ளது.

அன்றாட கரோனா பாசிடிவிட்டி விகிதம் 17.78% ஆக உள்ளது.

கரோனா தாக்கம் அதிகமுள்ள மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு முறையே 2,3,4 ஆம் இடங்களிலும் உள்ளன.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 3,33,533.

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,92,37,264

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 2,59,168.

இதுவரை குணமடைந்தோர்: 3,45,70,131

சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை: 21,87,205

தினசரி பாசிடிவிட்டி விகிதம் 17.78% என்றளவில் உள்ளது. ( பாசிடிவிட்டி ரேட் என்பது 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று உறுதியாகிறது என்பதன் விகிதம் )

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 525.

கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,89,409.

இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 1,61,47,69,885 (161 கோடி)

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x