Published : 22 Jan 2022 07:40 AM
Last Updated : 22 Jan 2022 07:40 AM

மத்திய பட்ஜெட் குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடர் முதல் கட்டமாக ஜனவரி 31 முதல் பிப்ரவரி 11-ம் தேதி வரையும், இரண்டாம் கட்டமாக மார்ச் 14 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரையும் நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. வரும் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான வரும் 31-ம் தேதி காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். இதைத் தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அன்றைய தினம் மாலை பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் 31-ம் தேதி பாஜக ஆட்சி மன்ற குழு கூட்டம், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கூட்டம் ஆகியவையும் நடைபெறும் என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x