Published : 19 Jan 2022 07:09 AM
Last Updated : 19 Jan 2022 07:09 AM

2-3 வாரங்களுக்கு மேல் இருமல் நீடித்தால் காசநோய் பரிசோதனை செய்வது அவசியம்: புதிய கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

புதுடெல்லி: இரண்டு, மூன்று வாரங்களுக்கு மேல் இருமல் நீடித்தால் காசநோய்பரிசோதனை செய்து கொள்ளவேண்டியது அவசியம் என்றுமத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கரோனா வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், மத்திய அரசு சார்பில்பெருந்தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போதைய சூழலுக்கு பொருந்தும் வகையிலான கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது. அதில்கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்களாவன:

கரோனா நோயாளிகள் சிலர்இருமலாலும் பாதிக்கப்படுகின்றனர். அதன்படி, கரோனாவால் பாதிக்கப்பட்டவர் அல்லது பாதிக்கப்படாதவர் யாராக இருந்தாலும் 2- 3 வாரங்களுக்கு மேல் இருமல் நீடிக்குமேயானால், அவர்களுக்கு காசநோய் பரிசோதனைக்கு பரிந்துரைக்க வேண்டியது அவசியம்.அதே சமயத்தில், கடுமையானஇருமலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே ஹெச்ஆர்சிடி பரிசோதனையை மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும்.

கரோனா நோயாளிகளுக்கு ஸ்டீராய்டு மருந்துகள் மூலம்சிகிச்சை அளிப்பதை மருத்துவர்கள் தவிர்க்க வேண்டும். செயற்கைஆக்சிஜன் சுவாசம் தேவைப்படாத கரோனா நோயாளிகளுக்கு ஸ்டீராய்டு ஊசியை செலுத்துவது எந்தப் பலனும் அளிப்பதில்லை எனத் தெரியவந்துள்ளது.

அதேபோல, கரோனா நோயாளிகளுக்கு மிகவும் முன்கூட்டியே இதுபோன்ற ஸ்டீராய்டு மருந்துகளை வழங்குவது பூஞ்சை தொற்றை ஏற்படுத்தும் என்பதை மருத்துவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இதயநோயாளிகள், அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், ஹெச்ஐவி, காசநோய், நுரையீரல், கல்லீரல், சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு பெருந்தொற்று பாதிப்பு கடுமையாவதற்கும் அல்லது இறப் பதற்கு கூட வாய்ப்பு உள்ளது.

மிதமான கரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு காய்ச்சல், வலி நிவாரணி மருந்துகளை கொண்டு சிகிச்சை அளிக்கலாம். மிக தீவிரமான பாதிப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே சி.டி. ஸ்கேன் அல்லது விலை உயர்ந்த ரத்தப் பரிசோதனைகளை எடுக்க மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும். மிதமான தொற்று பாதிப்பு உள்ளவர்களுக்கு மெத்தில்ப்ரீட்னி சோலோன்ஊசியை 0.5 மி.கி. அளவுக்கு செலுத்தி சிகிச்சை அளிக்கலாம்.

எந்தவித கரோனா நோயாளிகளுக்கும் ஐவர்மெஸ்டின், ஃபாவிபிரவிர், டாக்சிசைக்லின் ஆகிய மருந்துகளை பரிந்துரைக்க வேண்டாம். கரோனா தொற்றுக்கு உள்ளாகி 10 நாட்களுக்கு மேலாகியும் பாதிப்பு குறையாதவர்களுக்கு ரெம்டெசிவர் மருந்தினை கொடுக்கலாம். இவ்வாறு புதிய வழிகாட்டுநெறிமுறையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x