Published : 19 Jan 2022 11:55 AM
Last Updated : 19 Jan 2022 11:55 AM

தெலங்கானா - சத்தீஸ்கர் எல்லையில் 4 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை

ஹைதராபாத்: தெலங்கானா - சத்தீஸ்கர் மாநில எல்லையில் பேரூரு, இல்மாட்டி, ஊசூரு ஆகிய பகுதிகளில் உள்ள வனப்பகுதியில் சீனியர் மாவோயிஸ்ட் சுதாகர் மற்றும் 40-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இரு மாநில போலீஸாரும் அந்தப் பகுதிகளுக்கு ஆயுதங்களுடன் சென்றனர். அங்கு சுமார் 3 நாட்களாக மாவோயிஸ்ட்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் தெலங்கானா எல்லைக்குட்பட்ட வனப் பகுதியில் நேற்று அதிகாலையில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. வெகுநேரம் நீடித்த இந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு பெண் உட்பட 4 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். இந்த மோதலில் ஹைதராபாத்தை சேர்ந்த ஆயுதப்படை காவலர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

அவர் ஹெலிகாப்டர் மூலம் வாரங்கல் கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x