Last Updated : 30 Apr, 2016 10:07 AM

 

Published : 30 Apr 2016 10:07 AM
Last Updated : 30 Apr 2016 10:07 AM

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள படேல் உள்ளிட்ட பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: குஜராத் மாநில அரசு அறிவிப்பு

படேல் சமூகத்தினர் உட்பட பொரு ளாதாரத்தில் பின்தங்கியுள்ள பொதுப் பிரிவினருக்கு, 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று குஜராத் அரசு அறிவித்துள்ளது.

குஜராத்தில் படேல் சமூகத் தினருக்கு இடஒதுக்கீடு அளிக்கக் கோரி, ஹர்திக் படேல் என்ற இளைஞர் தலைமையில் பெரும் போராட்டம் நடந்தது. அப்போது நடந்த வன்முறையில் போலீஸ் காரர் ஒருவரும் பலியானார். அதன் பின், ஹர்திக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை விடுவிக்கக் கோரி மீண்டும் போராட்டம் வெடித்து ஓய்ந்தது.

இந்நிலையில், படேல் சமூகத் தினர் உட்பட பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பொதுப் பிரிவின ருக்கு கல்வி, வேலைவாய்ப்பு களில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று குஜராத் அரசு நேற்று அறிவித்தது. இதற்கான அதிகாரப்பூர்வ அரசு ஆணை, குஜராத் தினமான மே 1-ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.

‘‘குஜராத்தில் ஆண்டுக்கு 6 லட்சத்துக்கும் குறைவான வருவாய் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக் கீட்டை பெறலாம்’’ என்று அமைச்சர் விஜய் ரூபானி நேற்று கூறினார்.

எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு அளிக்கப்படும் இடஒதுக்கீட்டுடன் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 10 சதவீத இடஒதுக்கீடு இருக்கும். எனவே, தற்போதைய இடஒதுக்கீட்டு முறைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ‘‘மக்கள் தொகை அதிகம் உள்ள நிலையில், இந்த 10 சதவீத இடஒதுக்கீடு போதாது. நாங்கள் 20 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி போராட்டம் நடத்துவோம்’’ என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சங்கர்சிங் வகேலா கூறினார்.

ஹர்திக் இயக்கம் நிராகரிப்பு

இடஒதுக்கீட்டுக்காக பெரும் போராட்டம் நடத்தி வரும் ஹர்திக் படேலின், ‘படிடார் அனாமத் அந்தோலன் சமிதி’, குஜராத் அரசின் இடஒதுக்கீட்டு அறிவிப்பை நிராகரித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு கூறும்போது, “குஜராத்தில் பாஜக அரசு இன்னொரு ‘லாலிபாப்’ கொடுத்து ஏமாற்ற நினைக்கிறது. பத்து சதவீத இடஒதுக்கீடு என்ற பெயரில் படேல் சமூகத்தினரை திசை திருப்ப பார்க்கிறது” என்று தெரிவித்துள்ளது.

ஆனால், இடஒதுக்கீட்டுக்காக போராடி வரும் மற்றொரு அமைப்பான, ‘சர்தார் படேல் குரூப்’, அரசு அறிவிப்பை வரவேற்றுள்ளது. எனினும், குஜராத்தின் அரசின் 10 சதவீத ஒதுக்கீடு, படேல் சமூகத்தினருக்கு எந்தளவுக்கு உதவியாக இருக்கும் என்பது குறித்து ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x