Published : 18 Jan 2022 09:47 AM
Last Updated : 18 Jan 2022 09:47 AM

இந்தியாவில் புதிதாக 2.38 லட்சம் பேருக்குக் கரோனா: நேற்றைவிட 7% குறைவு

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2.38 லட்சம் பேர் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆனால், இது நேற்றைவிட 7 சதவீதம் குறைவு என்பதும், பாசிடிவிட்டி விகிதம் 19.65%ல் இருந்து 14.43% ஆகக் குறைந்துள்ளதும் கவனிக்கத்தக்கது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 76 லட்சத்து 18 ஆயிரத்து 271 ஆக அதிகரித்துள்ளது.

ஒமைக்ரான் தொற்றும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒட்டுமொத்த பாதிப்பு 8,891 ஆக அதிகரித்துள்ளது. இது நேற்றைவிட 8.3% அதிகம்.
கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவருவோர் எண்ணிக்கை 17 லட்சத்து 36 ஆயிரத்து 628 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் 310 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 86 ஆயிரத்து 761ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் இதுவரை 3 கோடியே 53 லட்சத்து 94 ஆயிரத்து 882 பேர் குணமடைந்துள்ளனர்.

இதுவரை 158.04 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. அன்றாட பாசிடிவிட்டி விகிதம் 14.43% என்றளவில் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x