Published : 14 Jan 2022 05:54 PM
Last Updated : 14 Jan 2022 05:54 PM

‘‘பாஜக விக்கெட்டுகள் விழுகின்றன; யோகி ஆதித்யநாத்துக்கு கிரிக்கெட் விளையாடத் தெரியாது’’- அகிலேஷ் கிண்டல்

லக்னோ: உ.பி.யில் பாஜகவின் விக்கெட்டுகள் ஒவ்வொன்றாக விழுகின்றன, உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கிரிக்கெட் விளையாடத் தெரியாதவர் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார்.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கின்றன. பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி மார்ச் 7ம் தேதிவரை 7 கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது, மார்ச் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக பாஜகவிலிருந்து அக்கட்சியின் மூத்த தலைவர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வெளியேறி வருகின்றனர்.

பாஜக அரசில் அமைச்சர்களாக இருந்த சுவாமி பிரசாத் மவுரியா, தரம்சிங் சைனி ஆகியோர் இன்று அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:


‘‘நாங்கள் சட்டப்பேரவை தேர்தலுக்காக காத்திருந்தோம். தேர்தல் வந்து விட்டது. சமாஜ்வாதியும் அம்பேத்கர்வாதியும் இணைந்துள்ளதை யாராலும் தடுக்க முடியாது. உ.பி.யில் பாஜவின் விக்கெட்டுகள் ஒவ்வொன்றாக விழுகின்றன. உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கிரிக்கெட் விளையாடத் தெரியாதவர். சுவாமி பிரசாத் மவுரியா தன்னுடன் ஏராளமான தலைவர்களை அழைத்து வந்துள்ளார். அனைவரும் ஒன்றாக சேர்ந்து உ.பி.யின் வளர்ச்சிக்குரிய நல்ல அரசை அமைப்போம்’’

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x