இந்தியா
‘‘தமிழகத்தின் எழுச்சிமிக்க கலாச்சாரத்தின் அடையாளம் பொங்கல்’’- பிரதமர் மோடி வாழ்த்து
புதுடெல்லி: தமிழகத்தின் எழுச்சிமிக்க கலாச்சாரத்தின் அடையாளமாக பொங்கல் திகழ்கிறது, இந்த சிறப்பு வாய்ந்த நாளன்று அனைவருக்கும் எனது பொங்கல் வாழ்த்துகள் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ‘‘தமிழகத்தின் எழுச்சிமிக்க கலாச்சாரத்தின் அடையாளமாக பொங்கல் திகழ்கிறது. இந்த சிறப்பு வாய்ந்த நாளன்று அனைவருக்கும், குறிப்பாக உலகெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
இயற்கையுடனான நமது பிணைப்பும் நமது சமூகத்தின் சகோதரத்துவ உணர்வும் இன்னும் ஆழமாகதற்கு நான் பிரார்த்திக்கிறேன்’’ என தெரிவித்துள்ளார்.
