Published : 13 Jan 2022 06:59 AM
Last Updated : 13 Jan 2022 06:59 AM

கர்நாடகா மாநிலத்தில் 145 போலீஸாருக்கு தொற்று

பெங்களூரு: கர்நாடக சுகாதார அமைச்சர் கே.சுதாகர் நேற்று பெங்களூருவில் கூறியதாவது: கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 21,390 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூருவில் மட்டும் 15,617 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 145 போலீஸாரும், 18 மருத்துவ கல்லூரி மாணவர்களும் அடங்குவர். பெங்களூருவில் கரோனா பரவல் வேகம் 10 சதவீதத்தை கடந்துள்ளது.

தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் பசவராஜ் பொம்மை, அமைச்சர்கள் அசோக், சோமசேகர் உள்ளிட்டோர் நலமாக உள்ளனர். அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது.

கர்நாடகாவில் கரோனாவை கட்டுப்படுத்துவதற்கு வரும் 31-ம் தேதி வரை இரவுநேர ஊரடங்கு, வார இறுதிநாள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு 31-ம் தேதிவரை ஆன்லைனில் வகுப்புகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கேரளா, மகாராஷ்டிரா மாநில எல்லைகள் கண்காணிக்கப்பட்டு கரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டுவருவோர் மட்டுமே கர்நாடகாவுக்குள் அனுமதிக்கப் படுகின்றனர். இவ்வாறு அமைச்சர் சுதாகர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x