Last Updated : 11 Jan, 2022 06:13 AM

 

Published : 11 Jan 2022 06:13 AM
Last Updated : 11 Jan 2022 06:13 AM

மேகேதாட்டு அணை கட்ட கோரி காங்கிரஸார் பாத யாத்திரை: வழக்குப்பதிவு செய்ய முதல்வர் உத்தரவு

பெங்களூரு: காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு அனுமதி தராததால் கட்டுமான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் மேகேதாட்டு திட்டத்தை செயல்படுத்தக் கோரி காங்கிரஸ் சார்பில் நேற்று முன் தினம் பாதயாத்திரை தொடங்கப்பட்டது.

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தலைமையிலான பாதயாத்திரையை மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகி யோர் தொடங்கி வைத்தனர். இதில் முன்னாள் துணை முதல் வர் பரமேஷ்வர், முன்னாள் அமைச்சர் ஆஞ்சநேயா உட்பட பல தலைவர்களும், ஆயிரக் கணக்கான தொண்டர்களும் பங்கேற்றனர்.

கனகபுரா அருகே நடந்து சென்ற போது சிவகுமாருக்கு மயக்கம் ஏற்பட்டது. அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது சிவகுமாருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள அதிகாரிகள் முடிவெடுத்தனர். அதற்கு டி.கே.சிவகுமார் மறுத்துவிட்டார். இதற்கு கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர், உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கண்டனம் தெரிவித்தனர்.

முதல்வர் பசவராஜ் கூறும் போது, ‘‘கரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் பாத யாத் திரை மேற்கொண்டவர்கள் மீதுவழக்குப்பதிவு செய்து நோட்டீஸ்அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளேன். மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் பாதயாத்திரை மேற்கொள்ளும் சிவகுமாருக்கு தேர்தலில் பாடம் கற்பிப்பார்கள்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x