Last Updated : 10 Jan, 2022 01:10 PM

 

Published : 10 Jan 2022 01:10 PM
Last Updated : 10 Jan 2022 01:10 PM

சுழன்றடிக்கும் 3-வது அலை: உச்ச நீதிமன்ற ஊழியர்களில் 5% பேருக்கு கரோனா தொற்று; 4 நீதிபதிகளும் பாதிப்பு

கோப்புப்படம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் ஊழியர்களில் 5 சதவீதம் பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர், 32 நீதிபதிகளில் 4 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கரோனா 3-வது அலை வேகமெடுத்துள்ளது. நாள்தோறும் லட்சக்கணக்கில் மக்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தலைநகர் டெல்லியிலும் ஆயிரக்கணக்கில் மக்கள் நோய் தொற்றுக்கு ஆளாகிறார்கள். கடந்த 24 மணிநேரத்தில் டெல்லியில் 20,000-க்கும் மேற்பட்டோர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா 2-வது அலை ஓய்ந்தபின், நீதிமன்ற வழக்காடு பணிகள் நேரடியாக நடக்கத் தொடங்கியது. கரோனா முதல் அலையில் தொடங்கி தொடர்ந்து காணொலி வாயிலாகவே நடந்து வந்தது. ஆனால் கரோனா 3-வது அலை தொடங்கியபின், நீதிபதிகளும், ஊழியர்களும் கரோனாவுக்கு இலக்காகியுள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் 32 நீதிபதிகள் இருக்கும் நிலையில், அவர்களில் 4 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏறக்குறைய 3,000 ஊழியர்கள் உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வருகிறார்கள்; இதில் குறைந்தபட்சம் 150 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். அதாவது உச்ச நீதிமன்ற ஊழியர்களில் 5 சதவீதம் பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். ஏராளமானோர் பிசிஆர் பரிசோதனை செய்து முடிவுக்காக காத்திருக்கிறார்கள். அந்த முடிவுகள் வந்தபின் தொற்று மேலும் அதிகரிக்கும்.

டெல்லி உயர் நீதிமன்றத்திலும் 4 நீதிபதிகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; ஏராளமான ஊழியர்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கடந்த 3-ம் தேதி முதல் அடுத்த 2 வாரங்களுக்கு வழக்குகள் அனைத்தும் காணொலி மூலமே விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துவிட்டது. அதன் சூழலை ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x