Published : 08 Jan 2022 06:04 AM
Last Updated : 08 Jan 2022 06:04 AM
லக்னோ: உத்தர பிரதேசத்தில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாஜகவுக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ், காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன.
இந்நிலையில், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் அண்மையில் பேசும்போது, "மாநிலத்தில் சமாஜ்வாதி ஆட்சி அமைத்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். பொதுமக்களுக்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப் படும்" என்று உறுதி அளித்தார். ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட அறிக்கையில், "300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும்" என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் முதல்வர் ஆதித்ய நாத் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
விவசாய பயன்பாட்டுக்கான மின்சாரத்தில் 50 சதவீத கட்டணம் குறைக்கப்படும். இந்த கட்டண குறைப்பு நடப்பு மாதம் முதலே அமலுக்கு வரும். இதன்மூலம் 13 லட்சம் விவசாயிகள் பலன் அடைவார்கள். கிராமங்களில் விவசாயிகள் ஒரு யூனிட்டுக்கு ரூ.2 கட்டணம் செலுத்துகின்றனர். இந்த கட்டணம் ரூ.1 ஆக குறைக் கப்படும்.
விவசாய மின் கட்டண குறைப்பால் உ.பி. மின் விநியோக கழகத்துக்கு ஆண்டுக்கு ரூ.1,000 கோடி இழப்பு ஏற்படும். இந்த தொகையை அரசு மானியமாக வழங்கும். இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT