Last Updated : 06 Jan, 2022 09:56 AM

 

Published : 06 Jan 2022 09:56 AM
Last Updated : 06 Jan 2022 09:56 AM

இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை நெருங்கியது: 2,630 பேருக்கு ஒமைக்ரான்

புதுடெல்லி: இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை நெருங்கியது.

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,630 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 90,928 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இது நேற்றைவிட 56.5% அதிகமாகும்.

ஒமைக்ரான் பரவலைப் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் 797 பேருக்கும் டெல்லியில் 465 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 90,928.

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,51,09,286.

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 19,206.

இதுவரை குணமடைந்தோர்: 3,43,41,009.

தினசரி பாசிடிவிட்டி விகிதம் 6.43% என்றளவில் உள்ளது. வாராந்திர பாசிடிவிட்டி ரேட் 3.47% ஆக உள்ளது. ( பாசிடிவிட்டி ரேட் என்பது 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று உறுதியாகிறது என்பதன் விகிதம் )

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 325.

கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,82,876.

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 2,85,401.

இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 148.67 கோடி.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாநில வாரியாக ஒமைக்ரான் பாதிப்பு:

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x