Published : 06 Jan 2022 12:04 PM
Last Updated : 06 Jan 2022 12:04 PM

காஷ்மீரின் புல்வாமாவில் என்கவுன்ட்டர்: 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: காஷ்மீரின் புல்வாமா மாவட்டம், சந்தகாம் என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் அந்த கிராமத்தை நேற்று சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து காஷ்மீர் மண்டல போலீஸ் ஐஜி விஜய்குமார் கூறும்போது, “கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகளும் ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பை சேர்ந்தவர்கள். இவர்களில் ஒருவர் பாகிஸ்தானை சேரந்தவர். சம்பவ இடத்திலிருந்து 3 துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள், கைப்பற்றப்பட்டன. இது எங்களுக்கு கிடைத்த ஒரு பெரிய வெற்றி” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x