Published : 06 Jan 2022 08:10 AM
Last Updated : 06 Jan 2022 08:10 AM
புதுடெல்லி: முப்படை தலைமை தளபதி பிபின்ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது பற்றிய முப்படை விசாரணை அறிக்கை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்அவருடைய மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகள் சென்ற ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த டிச. 8-ஆம் தேதியன்று விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் பிபின் ராவத் அவருடைய மனைவி உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து விசாரிக்க ஏர்மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையில் முப்படை விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இக்குழு சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தியது.குழுவின் விசாரணை அறிக்கைபாதுகாப்புத் துறை அமைச்சர்ராஜ்நாத் சிங்கிடம் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. அறிக்கை பற்றியவிவரங்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.
விபத்துக்கான காரணம், இனிஎதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், அதற்கான பரிந்துரைகள் ஆகியவை விசாரணைக் குழு அறிக்கையில் இடம்பெற்றிருப்பதாகவும் மோசமான வானிலை காரணமாக விபத்துஏற்பட்டிருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்துள்ள தாகவும் தகவல்கள் தெரிவிக் கின்றன.
- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT