Published : 02 Mar 2016 09:53 AM
Last Updated : 02 Mar 2016 09:53 AM

பச்சோரிக்கு எதிராக குற்றப்பத்திரிகை

பாலியல் புகாரில் சிக்கிய டாக்டர் ஆர்.கே.பச்சோரிக்கு எதிராக டெல்லி போலீஸார் நேற்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

தி எனர்ஜி அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் (TERI) துணை தலைவரான பச்சோரி மீது 29 வயது பெண் ஆய்வாளர் டெல்லி போலீஸில் பாலியல் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் அவர் மீது வழக்குபதிவு செய்யப் பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதன் காரணமாக காலநிலை மாற்ற பன்னாட்டு அரசுக்குழு தலைவர் பதவியில் இருந்து அவர் விலகினார்.

இந்நிலையில் டெல்லி நீதிமன்றத்தில் பச்சோரிக்கு எதிராக நேற்று போலீஸார் தரப்பில் 1,400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஆராய்ந்த நீதிபதி ஷிவானி சவுஹான் வழக்கின் அடுத்த விசாரணையை வரும் ஏப்ரல் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இவ்வழக்கு தொடர்பாக அரசு தரப்பில் 23 பேரிடம் சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x