Published : 01 Jan 2022 08:34 AM
Last Updated : 01 Jan 2022 08:34 AM
வெளிநாட்டு பக்தர்களுக்கும் திருப்பதி காலண்டர் போய் சேர வேண்டுமெனும் நோக்கத்தில் அமேசான் மூலம் இந்த ஆண்டு காலண்டர்கள், டைரிகள் விற்பனை செய்ய தேவஸ்தானம் அனுமதித்துள்ளது. ஆனால், 10 மடங்கு அதிக விலையில் அமேசான் நிறுவனம் தேவஸ்தான காலண்டர்களை விற்பதால், பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து திருப்பதி சிஐடியு மாவட்ட பொதுச் செயலாளர் கந்தாரபு முரளி கூறுகையில், ‘‘ மிக அதிக விலைக்கு காலண்டர்களையும், டைரிகளையும் விற்கும் அமேசான் மீது தேவஸ்தானம் ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஓருவேளை இரு தரப்புக்கும் ஏதாவது ஒரு உடன்பாடு இருக்குமோ என்னவோ ?’’ என கருத்து தெரிவித்துள்ளார். விலை அதிகமாக இருப்பதால் பல வெளிமாநில பக்தர்களும் இம்முறை காலண்டர்கள், டைரிகள் அமேசானில் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2021-ம் ஆண்டில் மட்டும் பக்தர்கள் உண்டியல் மூலம் ரூ. 833 கோடி காணிக்கை செலுத்தியுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT