Published : 30 Dec 2021 06:44 AM
Last Updated : 30 Dec 2021 06:44 AM

உ.பி. தொழிலதிபர் வீட்டில் ஒரு வாரமாக நீடித்த சோதனை நிறைவு- ரூ.196 கோடி ரொக்கம், 23 கிலோ தங்கம் 600 கிலோ சந்தன எண்ணெய் பறிமுதல்

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பியூஷ் ஜெயினுக்கு சொந்தமான இடங்களில் கடந்த ஒரு வாரமாக மேற்கொள்ளப்பட்டு வந்த வருமான வரி சோதனை நேற்று நிறைவுற்றது.

இந்த சோதனையில் மொத்தமாக ரூ.196 கோடி ரொக்கமும் ரூ.11 கோடி மதிப்புள்ள 23 கிலோ தங்கமும், ரூ.6 கோடி மதிப்புள்ள 600 கிலோ சந்தன எண்ணெய்யும் வரித் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

வாசனை திரவியம் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த பியூஷ் ஜெயின் ஐக்கிய அரபு அமீரகம்,சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு வாசனை திரவியம் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை முறைகேடாக அனுப்பியதாக புகார் எழுந்தது. மேலும் அவர் ஜிஎஸ்டி முறையாக கட்டவில்லை என்றும் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, கடந்த 22-ம் தேதி கான்பூரில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களில் வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதனிடையே பியூஷ் ஜெயின் கைது செய் யப்பட்டார். இந்த சோதனை நேற்று கன்னோஜ் மாவட்டத்தில் நிறைவுற்றது. இந்த சோதனையில் ரூ.196 கோடி ரொக்கம், 23 கிலோ தங்க நகைகள், 600 கிலோ சந்தன எண்ணெய் சிக்கின.

அங்கு சிக்கிய தங்கக் கட்டிகளை பரிசோதித்தபோது அவற்றில் வெளிநாட்டு முத்திரைகள்இருப்பது கண்டறியப்பட்டது. பியூஷ் ஜெயின் வெளிநாடுகளுடனான வர்த்தகத்தில், பெரும்பாலும் பணத்திற்கு பதிலாக தங்கக் கட்டிகளை வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. எப்படி வரி கட்டாமல் தங்கக் கட்டிகளை வெளிநாடுகளிலிருந்து இந்தியாகொண்டு வந்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x