Published : 30 Dec 2021 06:42 AM
Last Updated : 30 Dec 2021 06:42 AM
இந்தியாவில் இயக்கப்படும் விமானங்கள் மற்றும் விமான நிலையங்களில் இந்திய இசையை ஒலிபரப்ப வேண்டும் என்று விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தி யாவிடம் இந்திய கலாச்சார உறவுகள் குழு சார்பில் சமீபத் தில் மனு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, விமான நிறு வனங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு விமானப் போக்குவரத்துத்துறை இணை செயலாளர் உஷா பதீ கடிதம் எழுதியுள்ளார். அதில், "உலகின் பல நாடுகளில் விமான நிறுவ னங்களின் விமானங்களில் அந்தந்த நாடுகளின் இசை இசைக்கப்படுகிறது. ஆனால் இந்திய விமானங்களில் எப்போ தாவது மட்டுமே இந்திய இசை இசைக்கப்படுகிறது.
இந்திய இசை மக்களின் சமூக, மத ரீதியான வாழ்வின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. எனவே இந்திய விமானங்கள், விமான நிலையங்களில் நம் இசையை ஒலிபரப்ப வேண்டும்" என கூறப்பட்டுள்ளது. -பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT