Published : 27 Dec 2021 05:10 PM
Last Updated : 27 Dec 2021 05:10 PM

டெல்லியில் 6 மாதங்களில் இல்லாத அளவு கரோனா தொற்று உயர்வு: மஞ்சள் எச்சரிக்கை விடுக்க வாய்ப்பு

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி: டெல்லியில் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவாக 331 புதிய கோவிட் தொற்றுகள் ஏற்பட்டுள்ளன.

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது. இதையடுத்து, கரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் வகையில் உத்தரப்பிரதேசம், குஜராத், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.

கர்நாடக மாநில அரசும் வரும் 28ம் தேதி முதல் அடுத்த 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.

அடுத்து புத்தாண்டு வருவதால் அது தொடர்பாக கொண்டாட்டங்கள், நிகழ்ச்சிகள் நடக்கும். அப்போது மக்கள் ஏராளமானோர் கூடும்போது, தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதால், முன்கூட்டியே இரவு நேர ஊரடங்கை மாநில அரசுகள் பிறப்பித்துள்ளன.

டெல்லியில் இன்று முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 331 புதிய கரோனா தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. இது 6 மாதங்களில் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும். இதையடுத்து விரைவில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படும் எனத் தெரிகிறது.

டெல்லி அரசின் கிரேடட் ரெஸ்பான்ஸ் ஆக்ஷன் திட்டத்தின் (GRAP) கீழ், தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு நேர்மறை விகிதம் 0.5 சதவீதமாக இருந்தால் மஞ்சள் எச்சரிக்கை தொடங்கும். இது கூடுதல் கட்டுப்பாடுகளுக்கு வழிவகுக்கும். கோவிட் இன் மூன்றாவது அலையை எதிர்பார்த்து ஜூலை மாதம் டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x